இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தச் செய்வதற்காக, சாகர் திட்டத்தின் கீழ் INS சுனைனா கப்பல் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
16 வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர் மற்றும் இந்தக் கப்பல் கூட்டுப் பயிற்சி மற்றும் நல்லுறவு நடவடிக்கைகளுக்காக கொழும்பு, சிங்கப்பூர், ஜகார்த்தா, புக்கெட், சிட்டகாங், யாங்கூன், மாலே மற்றும் கொச்சி போன்ற துறைமுகங்களுக்குச் செல்லும்.
இப்பயிற்சி கப்பல் செலுத்துதல், தீயணைப்பு, சேதக் கட்டுப்பாடு மற்றும் தேடுதல் மற்றும் பிடிப்பு (VBSS) உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.