இந்தியக் கடற்படையானது மிகப் பாரம்பரிய முறையில் கட்டமைக்கப்பட்ட கயிறுகள் மற்றும் வடங்கள் கொண்டு பலகைகள் கோர்க்கப் பட்டு உருவாக்கப்பட்ட கப்பலை INSV கௌண்டின்யா என்ற பெயரில் படையில் இணைத்தது.
முதல் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய மாலுமியின் பெயர் கொண்டு இதற்கு இந்தப் பெயரிடப் பட்டது.
கௌண்டின்யா அல்லது முதலாம் கௌண்டின்யா என்பவர் தென்கிழக்கு ஆசியப் பகுதிக்குப் பயணம் செய்த ஒரு புகழ்பெற்ற முதல் நூற்றாண்டு காலத்தினைச் சேர்ந்த இந்திய வணிகர் ஆவார்.
இந்தக் கப்பல் ஆனது அஜந்தா குகைகளில் காணப்படும் 5 ஆம் நூற்றாண்டின் ஒரு ஓவியத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மிக நீண்டகால கடல்சார் ஆய்வு வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்ற மரபுகளின் உறுதியான அடையாளமாக செயல்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத்திலிருந்து ஓமன் வரையிலான பண்டைய வர்த்தகப் பாதையில் ஒரு கடல் கடந்தப் பயணத்தினை மேற்கொள்வதற்கு என்று இந்தக் கப்பல் தற்போது தயாராகி வருகிறது.