TNPSC Thervupettagam
January 12 , 2026 11 days 80 0
  • நிதிசார் மென்பொருள் மற்றும் அமைப்புகள் (FSS) நிறுவனம் ஆனது இந்தியா, மத்திய கிழக்கு, ஆசியா பசிபிக் மற்றும் தென்னாப்பிரிக்கா பகுதியிலிருந்து ISO IEC 42001 சான்றிதழ் முன்னணி அந்தஸ்தைப் பெற்ற முதல் கொடுப்பனவு நிறுவனமாக மாறியுள்ளது.
  • ISO IEC 42001 என்பது செயற்கை நுண்ணறிவு மேலாண்மை அமைப்புகளுக்கான ஒரு உலகளாவிய தரநிலையாகும்.
  • இந்தச் சான்றிதழானது, செயற்கை நுண்ணறிவை நிர்வகிப்பதற்காக FSS நிறுவனம் ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் நிறுவனம் முழுவதுமான அமைப்பைப் பின்பற்றுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
  • மோசடியைக் கண்டறிதல், பரிவர்த்தனைக் கண்காணிப்பு, தகராறுகளை கையாளுதல் மற்றும் தானியக்கம் ஆகியவற்றிற்கு FSS நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தத் தரநிலையானது, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இடர் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தச் சான்றிதழ் TUV SUD நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்