TNPSC Thervupettagam

IUCN உலக பாரம்பரியக் கண்ணோட்ட அறிக்கை 2025

October 16 , 2025 15 days 53 0
  • IUCN அமைப்பின் 4வது உலக பாரம்பரியக் கண்ணோட்ட அறிக்கையானது அபுதாபியில் உள்ள IUCN உலக வளங்காப்பு மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது, இயற்கை மற்றும் கலப்பு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களின் பாதுகாப்பு நிலையை ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பிடும் சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியத்தின் உலகளாவிய மதிப்பீடு ஆகும்.
  • 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இயற்கை பாரம்பரியக் களங்கள் பவளப்பாறை வெளிர்தல், பனிப்பாறை உருகுதல் மற்றும் காட்டுத்தீ போன்ற நேரடி பருவநிலை அபாயங்களை எதிர்கொள்கின்றன.
  • உலகளாவிய நிலப்பரப்பு கார்பனில் தோராயமாக 10% ஆனது, இயற்கை உலகப் பாரம்பரியத் தளங்களில் சேமிக்கப்படுகிறது என்பதோடு இது பருவநிலை மீதான ஒழுங்குமுறையை ஆதரிக்கிறது.
  • மோதல், மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பலவீனம் காரணமாக 15 தளங்கள் "ஆபத்தில் உள்ள உலகப் பாரம்பரியத் தளங்கள்" பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டன.
  • இந்தியாவில், உலகளாவிய இயற்கைப் பாரம்பரியப் பகுதியில் 1.5 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கிய 7 இயற்கை மற்றும் கலப்பு உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
  • அதிகரித்து வரும் உப்புத் தன்மை, புயல்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக சுந்தரவனக்காடுகள் சதுப்புநிலச் சரிவை எதிர்கொள்கின்றன என்பதோடு இது பல்லுயிர் மற்றும் பாதுகாப்புச் சேவைகளைப் பாதிக்கிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் சுரங்கம், கட்டுமானம் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் நெருக்கடியில் உள்ளன என்ற நிலையில் இது சுற்றுச்சூழல் சம நிலையை அச்சுறுத்துகிறது.
  • நந்தா தேவி மற்றும் இமயமலை தேசியப் பூங்கா ஆகியவை பனிப்பாறை இழப்பு மற்றும் ஊடுருவல்/ஆக்கிரமிப்பு இனங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்