TNPSC Thervupettagam

K. உமாதேவி மற்றும் தமிழக அரசு இடையிலான வழக்கு

May 30 , 2025 10 days 79 0
  • மகப்பேறு கால விடுப்பு என்பது ஒரு பெண்ணின் பேறுகால உரிமைகளின் ஒரு அங்கம் ஆகும் என்பதோடு அது மகப்பேறு காலத்தின் நலத் திட்டங்களில் / பலன்களில் ஒருங்கிணைந்ததாகும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
  • முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு காலச் சலுகைகளை வழங்கும் 101(a) என்ற தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளின் அடிப்படை விதியின் படி அவருக்கு மகப்பேறுச் சலுகைகள் மறுக்கப்பட்டன.
  • அரசியலமைப்பின் 21வது சரத்து ஆனது, மகப்பேறு சார்ந்த தன்னியக்க உரிமையை உள்ளடக்கியது என்றும், மகப்பேறு கால விடுப்பு இந்த உரிமையின் ஓர் அம்சம் என்றும் நீதிமன்றம் கூறியது.
  • 42வது சரத்தானது, நியாயமான மற்றும் மனிதாபிமான வேலை சூழ்நிலைகள் மற்றும் மகப்பேறு கால நிவாரணத்தை வழங்குகிறது, மேலும் 51(c)வது சரத்தானது சர்வதேசச் சட்டம் மற்றும் ஒப்பந்தக் கடமைகளுக்கு இணங்குமாறு அரசின் மீது கடமையினை நிர்ணயிக்கிறது.
  • இந்தியாவில் மகப்பேறு கால விடுப்பு கொள்கையானது 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட 1961 ஆம் ஆண்டின் மகப்பேறுச் சலுகைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்