தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் தீக்காய சிகிச்சையில் முன்னோடியுமான டாக்டர் K. மாதங்கி இராம கிருஷ்ணன் சென்னையில் காலமானார்.
இவர் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை மற்றும் தீக்காயப் பிரிவை நிறுவினார்.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நுட்பமான தீக்காயங்களுக்கான உயிரணு மென் சவ்வு / கொலாஜன் நுட்பத்தினை அவர் உருவாக்கினார்.
டாக்டர் மாதங்கி 2002 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ, டாக்டர் B.C ராய் தேசிய விருது, 2014 ஆம் ஆண்டில் ஔவையார் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் G. விட்டேக்கர் சர்வதேச பர்ன்ஸ் பரிசு உட்பட பல விருதுகளைப் பெற்றார்.