K. வீராசாமி எதிர் இந்திய ஒன்றியம் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 1991 ஆம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து துணைக் குடியரசுத் தலைவர் சமீபத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
குப்புசாமி நாயுடு வீராசாமி 1941 ஆம் ஆண்டில் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.
அவர் 1953 ஆம் ஆண்டில் அரசு உதவி வழக்கறிஞராகவும் 1959 ஆம் ஆண்டில் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.
1969 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று, அவர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார்.
1976 ஆம் ஆண்டில், மத்தியப் புலனாய்வுத் துறை 1947 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு (PC) சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்காக அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது.
அவர் மீது தொடங்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய அவர் 1978 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
1979 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு (மூன்று நீதிபதிகள் கொண்ட) ஆனது 2-1 பெரும்பான்மை தீர்ப்பில் விசாரணையை ரத்து செய்ய மறுத்து விட்டது.
நீதிபதி வீராசாமி பின் மேல்முறையீடு மூலம் உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்ற ஒரு நிலையில் அது இறுதியாக 1991 ஆம் ஆண்டில் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்தது.
1947 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு "அரசு ஊழியரா இல்லையா" என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களைப் போலல்லாமல், அரசியலமைப்பின் கீழ் உயர் நீதித்துறை நீதிபதிகளுக்கு எந்த விலக்குரிமையும் இல்லை என்று அரசாங்கத் தரப்பு வாதிட்டது.
3-2 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், ஒரு நீதிபதி மீது ஊழல் வழக்கு பதிவு செய்வதற்கு, அவர் அரசு ஊழியராகக் கருதப்படலாம் என்றாலும், அதற்கான அனுமதி இந்தியத் தலைமை நீதிபதியிடமிருந்து பெறப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
2019 ஆம் ஆண்டில், முதன்முறையாக, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியான S.N. சுக்லாவுக்கு எதிராக FIR பதிவு செய்வதற்காக என்று அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் CBI துறைக்கு அனுமதி அளித்தார்.
நீதிபதி கோகோய்க்கு முந்தைய இந்தியத் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா, நீதிபதி சுக்லாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிப் பரிந்துரைத்தாலும், அரசாங்கம் அந்தப் பரிந்துரை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.