தேசியப் பருவநிலை மாற்றச் செயல் திட்டத்தில் (NAPCC) LiFE திட்டத்தினை (சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை) சேர்ப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தற்போது, பருவநிலை மாற்றத்தினை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட நீர், எரிசக்தி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் NAPCC என்பது செயலில் உள்ள எட்டு முக்கியப் பணிகளைக் கொண்டுள்ளது.
LiFE திட்டத்தினை ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) பங்குதாரர்களின் 26வது மாநாட்டில் (COP26) இந்தியப் பிரதமர் முன் வைத்தார்.
இந்தத் திட்டமானது, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு அதிகாரப் பூர்வமாக தொடங்கப் பட்டது.
2022 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வளங்காக்கவும் தனிப்பட்ட வகை மற்றும் கூட்டு நடவடிக்கை எடுக்க இந்தியாவிலும் உலகெங்கிலும் குறைந்தது சுமார் ஒரு பில்லியன் மக்களை அணி திரட்டுவதே இதன் நோக்கமாகும்.
இது நிலைத் தன்மைக்கான ஒரு கூட்டு அணுகுமுறையில் மூன்று மிகவும் முக்கிய மாற்றங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது:
தனிப்பட்ட மட்டத்தில் தேவையில் மாற்றம்,
வணிக மட்டத்தில் விநியோகத்தில் மாற்றம் மற்றும்
நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை ஆதரிக்கும் கொள்கையில் மாற்றம்.