TNPSC Thervupettagam

M23 போராளிகள் அமைதிப் பேச்சு வார்த்தை

August 28 , 2026 21 days 100 0
  • காங்கோ ஜனநாயகக் குடியரசும் M23 போராளிகளும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான செயல்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசும், ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 ஆயுதக் குழுவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு செயல்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசு பல தசாப்தங்களாக மோதல்களால் பிளவுபட்டுள்ளது, அதன் கனிம வளம் நிறைந்த நிலப்பரப்பிற்காக பல ஆயுதக் குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன.
  • M23 கடந்த ஆண்டு இப்பகுதியின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
  • இரு தரப்பினரும் கடந்த ஆண்டு இறுதியில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், ஆனால் சண்டை தொடர்கிறது.
  • இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, கத்தார், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மத்தியஸ்தராகச் செயல்படும் டோகோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்