ரஷ்யாவின் மாஸ்கோ என்னுமிடத்தில் நடைபெற்ற MAKS 2021 எனும் வானியல் சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டர் அணி முதன்முறையாகப் பங்கேற்றது.
ரஷ்யாவில் சாரங் அணி தனது நான்கு ஹெலிகாப்டர்களின் சாகசத்தை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
சாரங் அணியானது ‘துருவ்’ எனப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப் பட்ட இலகுரக ஹெலிகாப்டருடன் இந்த சாகசத்தில் பங்கேற்றது.
சாரங் அணியானது பெங்களூருவில் 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
துருவ் எனும் ஹெலிகாப்டரானது இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.