TNPSC Thervupettagam

MGNREGA திட்டத்தின் கீழ் ஊதிய உயர்வு

March 31 , 2023 869 days 397 0
  • கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான ஊதிய விகிதங்களை உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • ஹரியானா மாநில அரசானது, அதிகபட்சமாக 357 ரூபாயினைத் தினசரி ஊதியமாக வழங்குகிறது.
  • மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த ஊதியமாக ரூ.221 வழங்குகின்றன.
  • கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வெறும் இரண்டு சதவீத உயர்வுடன் மிகக் குறைந்த அளவிலான ஊதிய உயர்வைப் பெற்றுள்ளன.
  • 10.39 சதவீதம் ஊதியங்கள் அதிகரிப்புடன் ராஜஸ்தான் மாநிலமானது, ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தற்போதைய ஊதிய விகிதத்தை விட அதிகபட்சமான அளவிலான ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளது.
  • மற்ற ஏழு மாநிலங்கள், தற்போதைய (2022-23) ஊதிய விகிதங்களை விட 2023-24 ஆம் ஆண்டிற்கான ஊதிய விகிதங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஒரு அளவிலேயே ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளன.
  • அவை மேகாலயா (3.4 சதவீதம்), மணிப்பூர் (3.59 சதவீதம்), அருணாச்சலப் பிரதேசம் (3.7 சதவீதம்), நாகாலாந்து (3.7 சதவீதம்), அசாம் (3.93 சதவீதம்), தமிழ்நாடு (4.63 சதவீதம்), மற்றும் புதுச்சேரி (4.63 சதவீதம்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்