அரசாங்கமானது முதன்முறையாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் அதன் செலவினங்களை அதன் வருடாந்திர ஒதுக்கீட்டில் 60 சதவீதமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
இதுவரை, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஆனது அத்தகைய செலவு வரம்பு இல்லாமல் தேவை சார்ந்த ஒரு திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.
தற்போது நிதி அமைச்சகம் ஆனது, MGNREGS திட்டத்தின் வருடாந்திரச் செலவினத்தில் நிதியாண்டின் முதல் பாதியில் 60 சதவீதம் வரையில் அதாவது 86,000 கோடி ரூபாய் செலவிட முடியும் என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
அதாவது செப்டம்பர் மாத இறுதி வரையில் இந்தத் திட்டத்திற்கு 51,600 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெறும்.
2025–26 ஆம் ஆண்டிற்கு, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆனது, 198.86 கோடி மனித உழைப்பு நாட்கள் கொண்ட தொழிலாளர் ஒதுக்கீட்டினை அங்கீகரித்து உள்ளது.
நிதியாண்டின் முதல் பாதியில் இதில் சுமார் 67.11 சதவீதம் அல்லது 133.45 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.