உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான MK – III என்ற விமானமானது அந்தமானின் பிளேயர் துறைமுகத்தில் ஐஎன்எஸ் உட்க்ரோஷ் கப்பலில் அதிகாரப் பூர்வமாக படையில் இணைக்கப்பட்டது.
இது இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்டதாகும்.
இந்த ஹெலிகாப்டரானது, பாதுகாப்புச் சேவைகள், குறிப்பாக உயரமான இடங்களில் நடைபெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதற்குப் பொருத்தமானதாகும்.