மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் வருகை மற்றும் 1934-ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் நினைவு கூரப்பட்டது.
தீண்டாமை ஒழிப்புக்கான நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சேலத்திற்கு எட்டு மணி நேர வருகை தந்த காந்தி, ஹஸ்தம்பட்டியில் தங்கியிருந்தார்.
1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணத்திற்கு அவர் வந்த பயணங்களில், 1920, 1923 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் சேலத்திற்கு வந்துள்ளார்.
தீண்டாமைக்கு எதிராக காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்ததால், 1934-ஆம் ஆண்டு வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
காங்கிரஸ் தலைவர்களான சி. விஜயராகவாச்சாரியார் மற்றும் பி. வரதராஜுலு நாயுடு ஆகியோரின் சொந்த ஊர் என்பதால், காந்திக்கு சேலம் தனிச்சிறப்பு மிக்கதாக இருந்தது.
1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிலாபத் இயக்கத்தின் போது, காந்தி, சி. ராஜ கோபாலாச்சாரி மற்றும் ஷௌகத் அலி ஆகியோர் வரதராஜுலு நாயுடுவின் இல்லத்தில் தங்கியிருந்தனர்.
1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், காந்தியின் தீர்மானத்தில் "சுயராஜ்யம்" என்ற கோரிக்கையைச் சேர்க்க விஜயராகவாச்சாரியாரும் மோதிலால் நேருவும் அறிவுறுத்தினர்.
சேலம் நகராட்சி மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, உணவகங்களில் பட்டியலிடப் பட்ட சாதியினரை அனுமதிக்க உத்தரவிட்டதுடன், விதியை மீறும் உணவகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப் படும் என்றும் எச்சரித்தது.
இந்த வரலாற்றுத் தொடர்புடைய ஓர் அஞ்சல் தலை அருங்காட்சியகமானது 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சேலத்தில் நிறுவப்பட்டது.