mRNA தடுப்பு மருந்து தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக பணியாற்றி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கு இக்னைட் லைஃப் சைன்ஸ் என்ற அறக்கட்டளையானது நிதி உதவியினை வழங்கியுள்ளது.
mRNA தடுப்பு மருந்துகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக குறிப்பாக அதன் தீவிரமான தொற்றிற்கு எதிராக சிறப்பான முறையில் செயல்திறன் கொண்டுள்ளதாக கருதப் படுகின்றது.
பைசர் மற்றும் மாடெர்னா ஆகிய இரு கோவிட்-19 தடுப்பு மருந்துகளும் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி SARS-Cov-2 வைரசிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்குகின்றன.