TNPSC Thervupettagam

NAM உச்சி மாநாட்டில் துணைக் குடியரசுத் தலைவர்

October 27 , 2019 2085 days 833 0
  1. அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற 18வது அணிசேரா இயக்கத்தின் (Non-Aligned Movement - NAM) உச்சி மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளத் தவறிவிட்டார்.
  • முன்னதாக வெனிசுலாவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு சந்திப்பையும்  அவர் தவற விட்டார்.
  • 1961 ஆம் ஆண்டு முதல், இந்தியப் பிரதமர் எப்போதும் NAM உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
  • விதிவிலக்கு: 1979 ஆம் ஆண்டில், சௌத்ரி சரண் சிங் தற்காலிகப் பிரதமராக இருந்த போது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தவற விட்டார்.
  • மோடியின் வராமையானது 60 வயதான இந்த அமைப்பில் கடந்த கால நடைமுறையிலிருந்து ஒரு தீர்க்கமான விலகலைக் குறிக்கிறது.
  • XVIIIவது NAM உச்சி மாநாட்டின் கருப்பொருள் "சமகால உலகின் சவால்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் போதுமான பதிலை உறுதி செய்வதற்காக பாண்டுங் கோட்பாடுகளை நிலை நிறுத்துதல்" என்பதாகும்.
பாண்டுங் கோட்பாடுகள்
  • பாண்டுங்கின் பத்து கோட்பாடுகள் உலக அமைதி மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை உள்ளடக்கிய ஒரு அரசியல் அறிக்கையாகும்.
  • அவை 1955 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்க மாநாட்டில் வகுக்கப் பட்டன.
NAM பற்றி
  • அணிசேரா இயக்கத்தின் (NAM) நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒரு நாடாகும்.
  • NAM அமைப்பானது 1961 ஆம் ஆண்டில் 29 உறுப்பினர்களுடன் நிறுவப் பட்டது.
  • தற்போது இது 120 உறுப்பினர்களாக வளர்ந்து தேசிய-நாடுகளின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றாக விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்