TNPSC Thervupettagam
September 1 , 2025 23 days 84 0
  • தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் குறியீட்டு (NARI) அறிக்கையானது, 31 நகரங்களில் 12,770 பெண்களை ஆய்வு செய்து, தேசியப் பாதுகாப்பு மதிப்பெண்ணை 65 சதவீதமாக குறிப்பிட்டுள்ளது.
  • கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஐஸ்வால், காங்டாக், இட்டாநகர் மற்றும் மும்பை ஆகியவை பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக தரவரிசைப் படுத்தப் பட்டன.
  • பாட்னா, ஜெய்ப்பூர், ஃபரிதாபாத், டெல்லி, கொல்கத்தா, ஸ்ரீநகர் மற்றும் ராஞ்சி ஆகியவை மிகக் குறைந்த பாதுகாப்பான நகரங்களாக அடையாளம் காணப்பட்டன.
  • கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 40 சதவீதத்தினர் தங்களது நகரத்தில் 'அவ்வளவு பாதுகாப்பாக இல்லை' அல்லது 'பாதுகாப்பற்றதாக' உணர்கிறார்கள் என்று குறிப்பிட்டனர்.
  • 86 சதவீதப் பெண்கள் பகல் நேரங்களில் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
  • 91 சதவீத பெண்கள் தங்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக உணர்ந்தனர், ஆனால் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் POSH (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு) கொள்கை அமலாக்கம் குறித்து உறுதியாக தெரிந்திருக்கவில்லை.
  • 2024 ஆம் ஆண்டில், பொது இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக 7 சதவீதப் பெண்கள் தெரிவித்தனர் என்ற நிலையில் இது 24 வயதிற்குட்பட்ட பெண்களிடையே 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • துன்புறுத்தலை எதிர்கொண்ட மூன்று பெண்களில் ஒருவர் மட்டுமே அது குறித்து புகார் அளித்துள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்