போதைப்பொருள் விசாரணைக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட 'நாரிட் AI' என்ற கருவியை குஜராத் காவல்துறை உருவாக்கியுள்ளது.
NARIT AI ஆனது (போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்க அடிப்படையிலான விசாரணை கருவி) போதைப்பொருள் தொடர்பான வழக்குகளைக் கையாளுவதில் காவல்துறைக்கு உதவுகிறது.
இது முதல் தகவல் அறிக்கையை (FIR) பகுப்பாய்வு செய்து, விரிவான விசாரணை அறிக்கைகளை உருவாக்குகிறது.
இது RAG (மீட்பு மேம்படுத்தப்பட்ட உருவாக்கம்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதோடு மேலும் இது NDPS சட்டம் (போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம், 1985) போன்ற சட்டங்களைப் பயன்படுத்துகிறது.
இது ஆதாரங்களுக்கான சரி பார்ப்புப் பட்டியல்கள், சட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குவதோடு, நீதிமன்றத்தில் சாத்தியமான எதிர் வாதங்களையும் கணிக்கிறது.