அமெரிக்காவானது நிலப்பரப்பிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் தேசிய மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு – II (NASAMS-II) என்பதினை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தேசியத் தலைநகர்ப் பகுதியைப் பாதுகாப்பதற்கான மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
எதிரி நாட்டின் விமானம், ஆளில்லா குட்டி விமானம் அல்லது வளர்ந்து வரும் ஏவுகணை அமைப்புகளிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை அழிக்கும் திறனை இது அதிகரிக்கும்.