TNPSC Thervupettagam
November 3 , 2020 1741 days 844 0
  • பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (NCLAT - National Company Law Appellate Tribunal) நிர்வாகத் தலைவராக நீதிபதி (ஓய்வு) பன்சி லால் பட் என்பவரின் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது.
  • நீதிபதி பன்சி லால் பட், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முதல் தலைவரான நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாவிற்குப் பின்னர் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம், 2013 என்ற சட்டத்தால் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் நிறுவப் பட்டது.
  • இது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான முறையீடுகளை விசாரிக்கிறது.
  • மேலும் இது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (National Company Law Tribunal), திவால் மற்றும் நொடித்தல் நிலை வாரியம் மற்றும் இந்தியப் போட்டி ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான ஒரு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்