மும்மொழிக் கொள்கை உட்பட, 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையினை (NEP) செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மாநில அரசுகளைக் கட்டாயப் படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்திய அரசியலமைப்பின் 32வது சரத்து மூலம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய உத்தரவுகளை மட்டுமே உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் எனவும் கூறியது.