மத்திய அரசானது அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA - National Food Security Act), 2013 என்ற சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் பயன்கள் NFSA சட்டம் அல்லது மாநிலங்களின் பொது விநியோக அமைப்பு ஆகியவற்றின் கீழ் உள்ளடங்காதவர்களுக்கு வழங்கப் படுகின்றது.
தற்பொழுது குடும்ப அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகள் ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் பயன்களைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.