TNPSC Thervupettagam

NIA-ன் கூடுதல் கிளைகள்

October 4 , 2020 1766 days 653 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது தேசியப் புலனாய்வு அமைப்பின் (NIA - National Investigation Agency) 3 கூடுதல் கிளைகளை (சென்னை, இம்பால், ராஞ்சி) அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் குறித்தும் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் விசாரணை நடத்துவதில் NIA-ன் திறனை வலுப்படுத்த இருக்கின்றது.
  • தற்பொழுது 9 நகரங்களில் NIA-ன் கிளைகள் உள்ளன
  • அவை குவஹாத்தி, ஜம்மு, கொல்கத்தா, கொச்சி, ஹைதராபாத், ராய்ப்பூர்லக்னோ, சண்டிகர் ஆகிய இடங்களில் அமைந்து உள்ளன.

NIA

  • இது இந்தியாவில் எந்தவொரு  தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காகவும் கையாளுவதற்காகவும் வேண்டி இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மத்திய நிறுவனமாகும்.
  • இது  2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று இந்தியப் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட தேசியப் புலனாய்வு ஆணையச் சட்டம், 2008 என்ற சட்டத்துடன் சேர்த்து  நடைமுறைக்கு வந்தது.
  • இது மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நிறைவேற்றப் பட்டது.
  • NIA ஆனது மாநில அரசுகளிடமிருந்து எந்தவொரு சிறப்பு அனுமதியைப் பெறாமலும் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதம் தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்