TNPSC Thervupettagam

NIPUN பாரத் முன்னெடுப்பு

July 7 , 2021 1398 days 2308 0
  • மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் தேதியன்று “NIPUN பாரத் முன்னெடுப்புஎனும் புதிய ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
  • NIPUN என்பதன் விரிவாக்கம் “National Initiative for Proficiency in reading with Understanding and Numeracy” (புரிதல் மற்றும் எண்ணறிவு ஆகியவற்றுடன் கூடிய படிப்பாற்றலைப் பெறச் செய்வதற்கான ஒரு தேசிய முன்னெடுப்பு) என்பதாகும்.
  • பொதுவான கல்வியறிவு மற்றும் எண்ணறிவு ஆகியவற்றைப் பெறுதலை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியில் அதற்குத் தக்க சூழ்நிலைகளை இந்த திட்டமானது வழங்கும்.
  • 2026-27 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குழந்தையும் தனது 3 ஆம் வகுப்பு படிப்பினை முடிக்கும் போது படிப்பாற்றல், எழுத்தாற்றல் மற்றும் எண்ணறிவு ஆகியவற்றில் போதுமான கற்றல் திறன்களை அடைவதை இது உறுதி செய்யும்.
  • இந்த முன்னெடுப்பானது சமக்ரா சிக்சா (Samagra Shiksha) எனும் பள்ளிக் கல்வித் திட்டத்தின்  ஒரு அங்கமாகச் செயல்படும்.
  • இது ஐந்து அடுக்கிலான அமலாக்கச் செயல்முறையாகும்.
  • இது அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் தேசிய, மாநில, மாவட்ட, வட்டார மற்றும் பள்ளி நிலைகளில் அமைக்கப்படும்.
  • இது புதிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து அதற்கேற்ப உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்