TNPSC Thervupettagam
July 28 , 2025 6 days 38 0
  • ஐதராபாத்தில் உள்ள தேசியக் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்திலிருந்து (NIRDPR) விலக கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) முடிவு செய்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது தேசியக் கிராமப்புற மேம்பாட்டு முன்னுரிமைகளிலிருந்து ஓர் அடிப்படை மாறுதலைக் குறிக்கிறது என்று பாராளுமன்ற நிலைக்குழு கூறியது.
  • NIRDPR ஆனது கிராமப்புற அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக உலகளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள நிறுவனமாகும்.
  • அதனுடனான பல்வேறு இணைப்புகளைத் துண்டிப்பது NIRDPR நிறுவனத்தின் நம்பகத் தன்மையைச் சேதப்படுத்தும் என்றும் அதன் நீண்ட கால ஆராய்ச்சியைப் பலவீனப் படுத்தும் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்கு கவனம் செலுத்தும் என்றும் அக்குழு எச்சரித்தது.
  • "The minimum government and the maximum governance - அரசாங்கத்தின் குறைந்தபட்சத் தலையீடு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற அரசாங்கத்தின் கோருதலானது அதன் சிறப்புத் தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அது கூறியது.
  • இக்குழுவானது வலுவான ஒத்துழைப்பு, கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், பரவலாக்கப் பட்ட முடிவெடுத்தல், அதிக சுயாட்சி மற்றும் போதுமான நிதியுதவி ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.
  • மிகவும் முக்கிய நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குழுவை அமைக்க அது MoRD அமைச்சகத்தினை வலியுறுத்தியது மற்றும் நிலைத் தன்மை மீட்டெடுக்கப்படும் வரை அரசாங்க மானியங்கள் தொடர்வதுடன் உடனடியான தலைமைத்துவ மாற்றத்திற்கும் அது அழைப்பு விடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்