TNPSC Thervupettagam
August 1 , 2025 14 hrs 0 min 35 0
  • இஸ்ரோ நிறுவனமானது இது வரை கட்டமைக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த குடிமை சேவைகள் பயன்பாடு சார்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அப்பெர்சர் ரேடார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar Satellite-NISAR) விண்ணில் ஏவியது.
  • NISAR என்பது நில நடுக்கங்கள், பனிப்பாறை இயக்கங்கள், கார்பன் பிரித்தெடுத்தல் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்புகள் போன்ற பருவநிலை மாற்றத்தால் தூண்டப் பட்ட பேரழிவுகளைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப அற்புதமாகும்.
  • GSLV-F16 என்பது இந்தியாவின் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (GSLV) 18வது பயணமாகும், மேலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மீக்குளிர் நிலையிலான உந்திகள் கொண்ட (கிரையோஜெனிக்) நிலையுடன் கூடிய 12வது கலமாகும்.
  • சூரிய ஒத்திசைவு துருவச் சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலை நிறுத்த GSLV பயன்படுத்தப்படும் முதல் பணி இதுவாகும்.
  • இந்த ஏவுதல் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய முடிவெடுக்கும் மற்றும் அவசரகால எதிர் நடவடிக்கை முயற்சிகளுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்