பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு அளவிலான முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பு (NISHTHA - National Initiative for School Heads and Teachers Holistic Advancement) என்ற திட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது.
80600 ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு DIKSHA தளத்தினைப் பயன்படுத்தி இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
NISHTHA திட்டமானது ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி மூலம் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.
ஆரம்பக் கல்வி நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்களின் திறன்களை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.