இந்தியத் தேசிய இணைய பரிமாற்ற (NIXI) நிறுவனமானது, சமீபத்தில் அதன் 20 ஆம் ஆண்டு ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
2003 ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் இது அமைக்கப்பட்டது.
இது தற்போது நாடு முழுவதும் சுமார் 77 இணையதளப் பரிமாற்ற மையங்களை (IXPs) இயக்குகிறது.
இது தாமதத்தைக் குறைத்தல், வேகத்தை மேலும் அதிகரித்தல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளை இந்தியாவின் எல்லைகளுக்குள் மேற்கொள்ள உதவுகிறது.