TNPSC Thervupettagam

NSAB மற்றும் அதன் செயல்பாடுகள்

May 5 , 2025 39 days 89 0
  • தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (NSAB) ஆனது 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
  • இது அரசாங்கத்தினைச் சாராத வகையிலான பிரபல வெளியாட்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவாகும் என்பதோடு இது தேசியப் பாதுகாப்புச் சபையினால் பரிந்துரைக்கப் படும் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து தனது பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறது.
  • NSAB வாரியத்தின் முக்கியச் செயல்பாடுகள் ஆனது, ஒரு நீண்டகாலப் பகுப்பாய்வை மேற்கொள்வதும் தேசியப் பாதுகாப்பு சபைக்கு (NSC) வேண்டிய தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த சில கண்ணோட்டங்களை வழங்குவதும், தேசியப் பாதுகாப்பு சபையினால் குறிப்பிடப்படும் பிரச்சினைகள் குறித்த நடவடிக்கைகள் / தீர்வுகள் மற்றும் கொள்கை விருப்பங்களைப் பரிந்துரைப்பதும் ஆகும்.
  • இது தொழில்துறை, ஊடகம் மற்றும் குடிமைச் சமூகம் உள்ளிட்ட பல களங்களைச் சேர்ந்த மக்களை உள்ளடக்கியதாகும்.
  • தேசியப் பாதுகாப்பு சபையின் செயலகம் (NSCS) ஆனது NSC, NSAB மற்றும் உத்தி சார்க் கொள்கைக் குழுவிற்கு உதவுகிறது.
  • 2011 ஆம் ஆண்டில், NSAB வாரியத்தின் அப்போதையத் தலைவரான நரேஷ் சந்திரா என்பவர் தலைமையில் ஒரு பணிக் குழுவை அரசாங்கம் நியமித்தது.
  • இது அந்தக் கட்டமைப்பை நன்கு மதிப்பாய்வு செய்து தேவைக்கேற்ப திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கான குழுவாகும்.
  • 2012 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையானது, தலைமைப் பணியாளர் குழுவின் நிரந்தரத் தலைவருக்கான பரிந்துரைகளை வழங்கியது.
  • பின்னர் அது பாதுகாப்புப் படைகளின் தலைவர் பொறுப்பாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்