TNPSC Thervupettagam

NTPC – எரிசக்திக்கான குறுகிய கால இலக்குகள்

June 30 , 2021 1498 days 596 0
  • தேசிய அனல்மின் நிலைய நிறுவனமானது (National Thermal Power Corporation – NTPC)  எரிசக்தி மீதான ஐ.நா.வின் உயர்மட்ட பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக தனது எரிசக்திக்கான குறுகிய கால இலக்குகளை அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல் எரிசக்தி நிறுவனம் எனும் பெருமையை NTPC நிறுவனம் பெற்றுள்ளது.
  • NTPC நிறுவனமானது ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும்.
  • 2032 ஆம் ஆண்டிற்குள் 60 GW திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையத்தை நிறுவுவதற்கு NTPC நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மேலும் 2032 ஆம் ஆண்டுக்குள் நிகர ஆற்றல் செறிவினை 10% வரை குறைப்பதையும் இந்த நிறுவனம்  இலக்காகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்