OECD-FAO பருப்புகள் குறித்த கண்ணோட்ட அறிக்கை 2021 – 2030
July 20 , 2021 1580 days 750 0
இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப் படுகிறது.
உலகளாவிய பருப்பு விற்பனையில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக உள்ளது.
இந்தியா இதுநாள் வரை இந்த புரதச் சத்துமிக்க பருப்பு வகைகளின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர், பதப்படுத்துதல், இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக திகழ்வதே இதற்குக் காரணமாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் பருப்பு வகைகள் வழங்கீடானது 22 மில்லியன் டன்களாக உயரும் என்றும் அதில் பாதியளவு ஆசியாவிலிருந்தும் குறிப்பாக இந்தியாவிலிருந்தும் கிடைக்கப் பெறும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.