TNPSC Thervupettagam

PESA மஹோத்சவம் 2025

December 28 , 2025 5 days 34 0
  • PESA திவாஸை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் இரண்டு நாட்கள் அளவிலான PESA (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு பஞ்சாயத்து அமைப்புகளின் விரிவாக்கம்) மஹோத்சவம் நடைபெற்றது.
  • இந்த மஹோத்சவம் ஆனது பழங்குடியினச் சமூகங்களை மேம்படுத்துவதையும் அவர்களின் உரிமைகள் மற்றும் மரபுகளை அங்கீகரிப்பதை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பழங்குடியினரின் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்குமான ஒரு தேசிய தளத்தை வழங்குகிறது.
  • 1993 ஆம் ஆண்டில், கிராமம், தொகுதி மற்றும் மாவட்ட மட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் அல்லது உள்ளூர் நிர்வாக அமைப்புகளை நிறுவுவதற்காக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது (73 வது திருத்தம்).
  • ஆனால், 73வது திருத்தச் சட்டம் பழங்குடியினப் பட்டியலிடப்பட்டப் பகுதிகளுக்கு தானாகவே பொருந்தாது.
  • PESA சட்டம் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு விதிகளை பழங்குடியினர் அதிகம் காணப் படும் ஐந்தாவது அட்டவணை பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது.
  • 1996 ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தச் சட்டம் இந்தப் பகுதிகளில் உள்ள கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அவற்றின் பாரம்பரிய நிர்வாக முறைகளைப் பராமரிக்க கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
  • தற்போது, ​​10 மாநிலங்களுக்கு ஐந்தாவது அட்டவணை சார் பகுதிகள் உள்ளன.
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆனது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியை PESA தினமாகக் கொண்டாடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்