TNPSC Thervupettagam
May 29 , 2025 9 days 82 0
  • PKM1 எனப்படும் மொரிங்கா ஒலிஃபெராவின் ஒரு வகையானது, உலகளவில் குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செனேகல், ருவாண்டா மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த மரத்தின் இலைகள் மற்றும் பூக்கள் இந்த நாடுகளில் உள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவும் என்று நம்பப்படும் பெரு நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
  • PKM1 அறிமுகமாவதற்கு முன்பு, இந்தியாவில் சுமார் ஆறு உள்நாட்டு/பூர்வீக வகை முருங்கை இருந்தன.
  • இந்த வகையின் அனைத்து மரங்களும் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்பதால் இந்த வகைகள் அழியாதப் பயிர்கள் ஆகும்.
  • 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் PKM1 வகை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உள்நாட்டு/பூர்வீக இனத்தைப் போலல்லாமல், PKM1 ஆறு அடி உயரம் வரை மட்டுமே வளரும், எனவே பறிப்பதற்கு இது எளிதானது.
  • உலக முருங்கை உற்பத்தியில் தமிழ்நாடு சுமார் 24% பங்கும் மற்றும் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது.
  • தேனி, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்கள் முருங்கை சாகுபடிக்கு நன்கு பெயர் பெற்றவை.
  • முருங்கை வளரும் முக்கிய மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் ஆகியவை 'முருங்கை ஏற்றுமதி மண்டலமாக' அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்