2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்களால் ஒரு புதிய “PM DeVINEதிட்டமானது“ முன்மொழியப் பட்டது.
அரசானது ரூ.1500 கோடி அளவிலான ஆரம்ப நிதி ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டத்தை அறிவித்தது.
PM DeVINE என்பதன் விரிவாக்கம் பிரதம மந்திரி வடகிழக்கு மேம்பாட்டு முன்னெடுப்பு (Prime Minister’s Development Initiative for North-East) என்பதாகும்.
இத்திட்டமானது மிசோரத்தில் “மூங்கில் இணைப்புச் சாலைகள்” உள்ளிட்ட உள் கட்டமைப்பு மற்றும் தேவை சார்ந்த சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சாலைகள் வனத்திலிருந்து மூங்கில்களை ஏற்றுச் செல்வதற்கு உதவும்.