TNPSC Thervupettagam

PM SVANidhi திட்டத்தின் மறுசீரமைப்பு

September 1 , 2025 23 days 114 0
  • PM SVANidhi திட்டத்தினை 2030 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் அதனை மறுசீரமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இந்தத் திட்டம் ஆனது ஆரம்பத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
  • இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறையால் கூட்டாக செயல்படுத்தப்படும்.
  • புதிய கட்டமைப்பின் கீழ், முதல் கடன் தவணையானது 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது தவணை 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாவது தவணை 50,000 ரூபாயாக உள்ளது.
  • திட்டத்தின் அமலாக்க பரவல் சட்டப்பூர்வ நகரங்களுக்கு அப்பால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
  • பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பல்வேறு நலத்திட்டங்களுடன் இணைக்க மாதாந்திர லோக் கல்யாண் மேளாக்கள் நடத்தப்படும்.
  • COVID-19 தொற்றுநோய் காலத்தில், 2020 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று PM SWANidhi திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 68 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனை செய்யும் நபர்களுக்கு 13,797 கோடி ரூபாய் மதிப்புள்ள 96 லட்சத்திற்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்தத் திட்டம் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது (2023) மற்றும் எண்ணிம மாற்றத்திற்கான வெள்ளி விருது (2022) ஆகியவற்றைப் பெற்று உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்