மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் பிரதான் மந்திரி உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் உருவாக்க (PMFME) திட்டமானது 2020-21 ஆம் ஆண்டு முதல் நம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் பீகார் முன்னணியில் உள்ளது.
PMFME திட்டம் ஆனது தனிப்பட்ட மற்றும் குழுமங்களுக்கான மானியங்களுடன் கூடிய கடன்களை வழங்குகிறது.
தனிப்பட்ட குறு உணவுப் பதப்படுத்தும் இந்த நிறுவனங்கள் ஆனது அதற்கான திட்டச் செலவினத்தில் 35% மானியத்தினை, அதாவது அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம்.
சுமார் 10,296 விண்ணப்பங்களில், சுமார் 6,589 அங்கீகரிக்கப்பட்டு அதற்குக் கடன்கள் வழங்கப் பட்டன என்ற நிலையில் இது மொத்தக் கடன் வழங்கீட்டில் 63% பங்கினைக் குறிக்கிறது.