TNPSC Thervupettagam

'PRASAD' திட்டம்

December 30 , 2022 901 days 484 0
  • இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புனிதப் பயண நகரமான ஸ்ரீசைலத்தில் உள்ள சுற்றுலா வசதி வழங்கீட்டு மையத்தில் ‘PRASAD’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • PRASAD திட்டம் என்பது ‘யாத்திரை மீளுருவாக்கம் மற்றும் ஆன்மீகப் பெருக்கத்திற்கான உத்வேக இயக்கம்’ ஆகும்.
  • இது சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் மேற்கொள்ளப் படும் முழுவதுமாக மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டமாகும்.
  • சமயச் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தியா முழுவதும் உள்ள புனிதப் பயணத் தலங்களை மேம்படுத்தி, அதை அடையாளம் காண்பதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • இது ஒரு முழுமையான சமயச் சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கான முன்னுரிமை அடிப்படையிலான, திட்டமிடப்பட்ட மற்றும் நிலையான முறையிலான புனிதப் பயண இடங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உள்நாட்டுச் சுற்றுலாவின் வளர்ச்சியானது பெருமளவில் புனிதப் பயணச் சுற்றுலாவையே சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்