PRATUSH என்பது ஹைட்ரஜனில் இருந்து வரும் சமிஞ்ஞைகளைப் பயன்படுத்திப் பேரண்டத்தின் மறு அயனியாக்கத்தினை ஆராய்வது என்பதைக் குறிக்கிறது.
இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட எதிர்கால விண்வெளிக் கதிர் வீச்சுமானி ஆய்வுப் பணியாகும்.
முதல் நட்சத்திரங்கள் மற்றும் அண்டங்கள் உருவான சகாப்தமான காஸ்மிக் டான் எனப்படும் பேரண்டத்தின் ஆரம்பக் காலத்தினை ஆய்வு செய்வதே இந்த பணியின் நோக்கமாகும்.
பூமியின் கதிர்வீச்சு குறுக்கீடுகள் மற்றும் அயனி மண்டலக் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக, PRATUSH நிலவின் சுற்றுப்பாதையில், குறிப்பாக நிலவின் தொலை தூரத்தில் செயல்படும்.
இந்த அமைப்பானது, ஒரு சிறிய முழு கட்டமைப்பினைக் கொண்ட ஒற்றைக் கட்டமைப்புக் கணினியை (SBC) பயன்படுத்தி வானலை வாங்கியைக் (ஆண்டெனா) கட்டுப்படுத்தி, FPGA (Field Programmable Gate Array) சிப் மூலம் தரவைச் செயலாக்குகிறது.
சோதனைகள் ஆனது கதிர் வீச்சுமானி மிகக் குறைந்த இடையூறினை (சத்தத்தை) கண்டறிந்து அதன் உணர்திறனை நிரூபிக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
SBC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எடை மற்றும் சக்தியைக் குறைத்து, விண்வெளிப் பயன்பாட்டிற்கு இந்தப் பணியை சாத்தியமானதாக்குகிறது.