கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் வழியில் பயின்றோருக்கான (PSTM) இடஒதுக்கீட்டின் கீழ் செய்யப் பட்ட அரசுப் பணி நியமனங்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
20% PSTM முன்னுரிமையைக் கோரிய 84 அரசுப் பணியாளர்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டுச் சட்டம், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்குகிறது.
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட PSTM அறிவிப்புகள், தேர்வுகள் மற்றும் நியமனங்களை இந்தத் திருத்தம் செல்லுபடியாக்குவதோடு, தொடர்புடைய தொடர் நடவடிக்கைகளையும் பாதுகாக்கிறது.
எதிர்காலத்தில், PSTM முன்னுரிமையை ஏற்கனவே பயன்படுத்தியவர்கள், அதிக ஊதியம் பெறும் பதவிகளுக்கு மட்டுமே அதை மீண்டும் பயன்படுத்த முடியும்.
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இந்த மசோதாவிற்கு 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ஒப்புதல் அளித்தார், அதன் பிறகு இது தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது.