September 19 , 2021
1426 days
659
- அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் QUAD நாடுகளின் முதலாவது தனிப்பட்டச் சந்திப்பினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்த உள்ளார்.
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் யோசிஹைடு சுகா ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
- நான்கு தரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தையானது ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடையே மேற்கொள்ளப்படும்.
- இது முதன்முறையாக 2007 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் சந்திப்பின் போது நடைபெற்றது.
- இந்த நான்கு நாடுகளும் ஜனநாயக நாடுகள், தடையற்ற கடல்சார் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பின் பொது நலன்கள் ஆகியவற்றுக்கான ஒரு பொதுவான தளமாகத் திகழ்கின்றன.
- சீனா இதனை ஒரு வளர்ந்து வரும் “ஆசிய NATO கூட்டமைப்பு” என முத்திரைப் பதித்து உள்ளது.

Post Views:
659