சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், முக்கியமான முதல் ஒரு மணி நேர காலத்தில் (Golden Hour) சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ மக்களை ஊக்குவிப்பதற்காக Rah-Veer (நல்ல சமாரியன்) திட்டத்தைச் செயல்படுத்தியது.
மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 இன் பிரிவு 134A இன் கீழ் 2020 இல் நல்ல சமாரியன் விதிகள் அறிவிக்கப்பட்டன.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் ஒருவரை அவரது தனிப்பட்ட விவரங்களை வெளியிடவோ, மருத்துவமனை கட்டணங்களை செலுத்தவோ அல்லது சட்டச் சிக்கலை எதிர்கொள்ளவோ கட்டாயப்படுத்த முடியாது.
Golden Hour என்பது கடுமையான காயம் ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரமாகும் என்பதோடு அப்போது கிடைக்கும் விரைவான மருத்துவ உதவி உயிர்களைக் காப்பாற்றும்.
Rah-Veer திட்டத்தின் கீழ், முதல் ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யும் ஒருவர், வருடத்திற்கு ஐந்து முறை வரை ₹25,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெறலாம்.
இந்தத் திட்டம் சாலை விபத்து இறப்புகளைக் குறைத்து, பயமின்றி மற்றவர்களுக்கு உதவும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.