March 1 , 2026
17 days
80
- தெற்கு மத்திய ரயில்வே, செகந்திராபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் Rail Parcel செயலியை அறிமுகப்படுத்தியது.
- இந்த செயலி சிப்பங்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் வசதியை அளிக்கிறது.
- இது நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண வசதிகளை வழங்குகிறது.
- இந்த சோதனைத் திட்டம் ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஏழு நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
- சரக்குத் தளவாடங்களை ஆய்வு செய்வதற்காக வேண்டி தெற்கு மத்திய ரயில்வே, IIM பெங்களூருவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இந்த முயற்சி 2030 ஆம் ஆண்டுக்குள் 3,000 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதல் இலக்கை ஆதரிக்கிறது.

Post Views:
80