TNPSC Thervupettagam

RBI ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாயத் திட்டம் 2026

July 6 , 2026 2 days 69 0
  • ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் முறையை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2021 ஆம் ஆண்டு கட்டமைப்பிற்குப் பதிலாக திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாயத் திட்டத்தை (RB-IOS) 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் செயல்படுத்தியுள்ளது.
  • இத்திட்டமானது வங்கிகள், NBFCகள் (வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்), கட்டண முறைமை இயக்குநர்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதற்கு விரைவான, கட்டணமில்லா மற்றும் விரோதமற்ற பொறி முறையை வழங்குகிறது.
  • இது "ஒரு நாடு, ஒரு குறைதீர்ப்பாயம்" என்ற அமைப்பைப் பின்பற்றுகிறது, இதனால் குறிப்பிட்ட மண்டல அலுவலகத்தை அடையாளப்படுத்தாமல் புகார்களை அளிக்க முடியும்.
  • நிதி இழப்புக்கான இழப்பீட்டு வரம்பை ₹30 லட்சமாகவும், அலைக்கழிப்பு, தாமதம் மற்றும் மன உளைச்சலுக்கான இழப்பீட்டை ₹3 லட்சமாகவும் RBI உயர்த்தியுள்ளது.
  • வாடிக்கையாளர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை அணுக வேண்டும், 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் ரிசர்வ் வங்கியிடம் முறையிடலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்