இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சலுகை அடிப்படையிலான பரிமாற்ற (ஸ்வாப்) வசதி 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதிக்குள் $40.8 பில்லியன் அந்நியச் செலாவணி (forex) வரவுகளை ஈர்த்துள்ளது.
வெளிநாட்டு நாணய வரவுகளை ஊக்குவிக்கவும் மற்றும் உள்நாட்டு பணப் புழக்கத்தை ஆதரிக்கவும் இந்த வசதி 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று தொடங்கப் பட்டது.
வெளிநாட்டு நாணய வெளிநாடுவாழ் (வங்கி) [FCNR(B)] வைப்புத்தொகைகள் $36.725 பில்லியன் என்ற அளவில் அதிகப் பங்கை அளித்துள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டு நாணயக் கடன்கள் (OFCBs) மற்றும் வெளி வணிகக் கடன்கள் (ECBs) உள்ளன.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தவும், இந்திய ரூபாயை நிலைப்படுத்தவும் மற்றும் வெளி நாட்டு நாணயப் புழக்கத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
FCNR(B) ஸ்வாப் சாளரம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலும், OFCB மற்றும் ECB வசதிகள் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலும் திறந்திருக்கும்.