TNPSC Thervupettagam

RBI உட்கர்ஷ் 2029 கட்டமைப்பு

April 17 , 2026 14 hrs 0 min 38 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2029 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்திற்கான தனது நடுத்தர கால உத்தியான “உட்கர்ஷ் 2029” என்பதைத் தொடங்கியுள்ளது.
  • டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, உலகளாவிய முன்னணி மத்திய வங்கியான RBI-ஐ மேலும் வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC), ஒருங்கிணைந்த கடன் வழங்கும் இடைமுகம் (ULI) மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (UPI) உலகளாவிய விரிவாக்கம் ஆகியவை முக்கிய முன்னெடுப்புகளில் அடங்கும்.
  • இது இந்திய ரூபாயின் சர்வதேசமயமாக்கலையும், சிறந்த எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளையும் ஊக்குவிக்கிறது.
  • ஒழுங்குமுறை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவைகள், நிதிச் சந்தைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பம் ஆகியவை இதன் கவனக் குவிப்புப் பகுதிகளில் அடங்கும்.
  • இந்தக் கட்டமைப்பு, கண்டுபிடிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையான வள ஒதுக்கீடு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்