TNPSC Thervupettagam

RE100 முன்னெடுப்பு

August 24 , 2025 14 days 53 0
  • சுஸ்லான் குழுமம் ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து 15 உற்பத்தி அலகுகளிலும் முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் உற்பத்தி மாற்றத்திற்கான உலகளாவிய RE100 முன்னெடுப்பில் இணைந்த முதல் இந்திய எரிசக்தி நிறுவனமாக இது மாறியது.
  • சுஸ்லான் நிறுவனம் 2035 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைமையையும் 2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து உமிழ்வு பகுதிகளிலும் நிகரச் சுழிய உமிழ்வு நிலையையும் எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, ​​அதன் துலே ரோட்டார் பிளேடு அலகு ஆனது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்குகிறது என்பதோடு இதன் மூலம் 92 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்பன் நடுநிலைமை எட்டப்படுகிறது.
  • இந்த நிறுவனமானது உலகளவில் 17 நாடுகளில் சுமார் 21.1 GW அளவிலான காற்றாலை ஆற்றல் திறனை நிறுவியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்