கடற்களவு மற்றும் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை தொடர்பான பிரச்சினைகள் மீதான பயிலரங்கத்தை இந்தியக் கடலோரக் காவற்படை நடத்தியது.
ஆசியாவில் உள்ள கப்பல்களுக்கு எதிராக கடற்களவு மற்றும் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையைத் தடுப்பது மீதான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ReCAAP - Regional Cooperation Agreement on Combating Piracy and Armed Robbery) மற்றும் தகவல் பகிர்மான மையம் (ISC - Information Sharing Centre) ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது.
ReCAAP
ஆசியாவில் உள்ள கடற்பகுதியில் கடற்களவு மற்றும் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதலாவது பிராந்திய அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தமாகும்.
இது 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
தற்பொழுது ReCAAP-ல் 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.