TNPSC Thervupettagam
June 26 , 2019 2186 days 717 0
  • கடற்களவு மற்றும் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை தொடர்பான பிரச்சினைகள் மீதான பயிலரங்கத்தை இந்தியக் கடலோரக் காவற்படை நடத்தியது.
  • ஆசியாவில் உள்ள கப்பல்களுக்கு எதிராக கடற்களவு மற்றும் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையைத் தடுப்பது மீதான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ReCAAP - Regional Cooperation Agreement on Combating Piracy and Armed Robbery) மற்றும் தகவல் பகிர்மான மையம் (ISC - Information Sharing Centre) ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது.
ReCAAP
  • ஆசியாவில் உள்ள கடற்பகுதியில் கடற்களவு மற்றும் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதலாவது பிராந்திய அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தமாகும்.
  • இது 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
  • தற்பொழுது ReCAAP-ல் 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்