TNPSC Thervupettagam
March 22 , 2026 15 hrs 0 min 38 0
  • ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு ஆதரவளிக்க, ஏற்றுமதி மேம்பாட்டு இயக்கத்தின் (EPM) கீழ் இந்திய அரசு 'RELIEF' (ஏற்றுமதி எளிதாக்கத்திற்கான மீள்திறன் மற்றும் தளவாடச் செயல்பாடு) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் சரக்குக் கட்டண உயர்வு, அதிக காப்பீட்டுப் பிரீமியங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நிச்சயமற்றத் தன்மையால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் ஏற்றுமதி கடன் அபாயக் காப்பீட்டை வழங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தால் (ECGC) செயல்படுத்தப்படுகிறது.
  • ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட ஏற்றுமதிகளுக்கு 100% கூடுதல் அபாயக் காப்பீட்டையும், இடையூறு காலத்தின் புதிய ஏற்றுமதிகளுக்கு 95% வரை காப்பீட்டையும் பெறலாம்.
  • இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஒரு ஏற்றுமதியாளருக்கு அதிகபட்சம் ₹50 லட்சம் வரை சரக்கு மற்றும் காப்பீட்டு கூடுதல் கட்டணத்தில் 50% வரை திரும்பப் பெறலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்