R.P.G.V. கோவிந்தன் செட்டியார் முன்பு ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு தாலுக்காவில் உள்ள சித்தோடு என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார்.
பள்ளி மாணவராக இருந்தபோதும், 1920–21 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் பங்கேற்றார்.
1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதியன்று, சித்தோடு மாரியம்மன் கோயில் அருகே ஒரு சத்தியாக்கிரகத்தை அவர் வழி நடத்தி, நமது நாட்டின் சுதந்திரத்திற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 மற்றும் மார்ச் 09 ஆகிய தேதி வரையிலான காலத்தில், அவர் ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டு ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் முன்னிலையில் சொற்பொழிவு ஆற்றினார்.
அவர் 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரக இயக்கத்திலும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றார்.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் ஈரோடு தேசிய விரிவாக்கத் திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.