கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கத் தேவையான நிதியை உடனடியாக தமிழக அரசுக்கு ஒதுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மத்திய அரசு அதற்கான நிதியினை ஒதுக்க வில்லை.
நமது மாநில அரசானது புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கல்விக் கட்டண நிதி ஒதுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
RTE சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் மத்திய அரசால் செலுத்தப்படும்.
RTE சட்டத்தின் கீழ் உள்ள சமக்ர சிக்சா திட்டம் ஆனது உண்மையில் 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதைப் போன்றது என்றும், ஆனால் RTE சட்டத்தின் கீழ் உள்ள கடமைகள் தனிப்பட்டவை என்றும் நீதிமன்றம் கூறியது.
2024-25 ஆம் நிதியாண்டில், இந்த சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஆகியவற்றினால் 3,586 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட இருந்தது.