TNPSC Thervupettagam

RTE குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு 2025

June 12 , 2025 2 days 42 0
  • கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கத் தேவையான நிதியை உடனடியாக தமிழக அரசுக்கு ஒதுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
  • 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மத்திய அரசு அதற்கான நிதியினை ஒதுக்க வில்லை.
  • நமது மாநில அரசானது புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கல்விக் கட்டண நிதி ஒதுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • RTE சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் மத்திய அரசால் செலுத்தப்படும்.
  • RTE சட்டத்தின் கீழ் உள்ள சமக்ர சிக்சா திட்டம் ஆனது உண்மையில் 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதைப் போன்றது என்றும், ஆனால் RTE சட்டத்தின் கீழ் உள்ள கடமைகள் தனிப்பட்டவை என்றும் நீதிமன்றம் கூறியது.
  • 2024-25 ஆம் நிதியாண்டில், இந்த சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஆகியவற்றினால் 3,586 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட இருந்தது.
  • இதில், மத்திய அரசின் பங்கு 2,151 கோடி ரூபாயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்